Headlines News :
Home » » கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்!

கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவர் இராணுவ வீரர் அல்ல எனவும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த உளவாளி எனவும் தெரியவந்துள்ளது.
இந்த உளவாளி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றிய செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த உளவாளியின் கொலையை பயன்படுத்தி வேறு காரணம் ஒன்றை பிரசித்தப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.
இதற்கு முன்னர் கிளிநொச்சியில் கோபி என்பவரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் பற்றிய தகவல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், இன்று காலை இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் குறித்த செய்தி பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site