Headlines News :
Home » » கோபியின் துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் பலியாகவில்லை-முரணான தகவல்களை கொண்டுவரும் நெடுங்கேணி தாக்குதல்

கோபியின் துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் பலியாகவில்லை-முரணான தகவல்களை கொண்டுவரும் நெடுங்கேணி தாக்குதல்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இராணுவ பயிற்சியொன்றின் போதே இராணுவ வீரர் உயிரிழந்தார் என்றும் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். 

இலங்கையின் நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு வீரரே இவ்வாறு உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார். 
Share this article :

Banner Ads

Friends Site