Headlines News :
Home » , » போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்து

போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 26வது மனித உரிமைகள் அமர்வின் போது இந்தவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கோரியுள்ளன.
மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றி இருந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத் ஹார்பர், 
அமெரிக்காவின் பிரேரணை அடிப்படையில் விசாரணைக்குழுவை அமைத்து, விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site