Headlines News :
Home » » வவுனியா இளைஞன் கட்டுநாயக்காவில் வைத்து கைது

வவுனியா இளைஞன் கட்டுநாயக்காவில் வைத்து கைது

வவுனியா, கசேணசபுரத்தைச் சேர்ந்த இளைஞன் வெளிநாடு ஒன்றிற்கு செல்ல முற்பட்ட வேளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கூறி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பன் அவர்களுக்கு உதவியதாக கூறி வவுனியா, கணேசபுரத்தைச் சேர்ந்த கணேசன் றேகன் (வயது30)  என்ற இளைஞனும் அவரது மனைவியுமே இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞனின் தந்தையார் கறுப்பையா கணேசன் (வயது 54) என்பவர் அப்பனுக்கு உதவிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Banner Ads

Friends Site