Headlines News :
Home » , » ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன-பிரித்தானியா

ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன-பிரித்தானியா


இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தியில்லை எனவும், அது குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரிட்டன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆண்டு தோறும் வெளியிடப்படும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றமில்லை.
போரின் பின்னர் புனரமைப்பு, உட்கட்டுமான அபிவிருத்தி, தேர்தல் நடத்துதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை இணைக்கப்பட வேண்டும்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

Banner Ads

Friends Site