யாழிலிருந்துகிளிநொச்சி நோக்கி  குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகவும். பளை பிரதேச செயலகத்தைஅண்மித்த வேளையில் அங்கு காணப்பட்ட மஞ்சள்கடவையில் பாடசாலை மாணவர்  ஒருவா்கடக்க முற்பட்ட வேளையில்   குறித்த பஸ் சாரதிபேருந்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றதாகவும்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாத நிலையில்மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டியைமோதியதுடன் அருகில் உள்ள தேநீர்கடை மற்றும் புடவைக்கடை ஆகியவற்றைஉடைத்து பேருந்து கடைகளுக்குள் உள் நுழைந்ததாகவும் கட்டிடம்மேல்மாடி என்பதால், மேல்மாடியின் மேல் கட்டிடம் இடிந்துபேருந்தின்மீது விழுந்ததாகவும் தெரிவிக்கின்றன. 
குறித்தவிபத்தில் திவாகர், மற்றும் கிளிநொச்சி மாகவித்தியாலயஆசிரியர் ஒருவரும் அதீ தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியை கடக்க முற்பட்டமாணவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 6 பேர் படுகாயங்கட்கு உள்ளாகியுள்ளமை தெரிய வருகின்றது.
இவ்விபத்தில்மாணவரின் துவிச்சக்கர வண்டி சேதமாகியுள்ளதுடன், பேருந்தும்பலத்த சேதமாகியுளள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து பளைப்பிரதேசபொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றானர்.















