Headlines News :
Home » » போராளியல்லாத எனக்குப் புனர்வாழ்வா? – விந்தை என்கிறார் அனந்தி சசிதரன்.

போராளியல்லாத எனக்குப் புனர்வாழ்வா? – விந்தை என்கிறார் அனந்தி சசிதரன்.


போராளியல்லாத தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.
  
“நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது. சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநிதியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கின்றேன். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன். இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Banner Ads

Friends Site